#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
இறந்துபோன கணவனின் உடலை சுமந்து செல்ல பிச்சை எடுத்த மனைவி - நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!
இறந்துபோன கணவனின் உடலை சுமந்து செல்ல பிச்சை எடுத்த மனைவி - நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!

இறந்துபோன கணவனின் உடலை கொண்டு செல்ல பணம் இல்லாததால் பிச்சை எடுத்துள்ளார் அவரது மனைவி.
சித்தூர் அடுத்த புங்கனூர் ஈடிகப்பள்ளியை சேர்ந்தவர் பாபுசாயபு. 48 வயதாகும் இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். கடந்தசில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனைவி தவுலத்பீவி, கணவரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமணையில் அவசர பிரிவில் சேர்த்துள்ளார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாபுசாயபுவை டாக்டர்கள் திருப்பதி ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், மேல் சிகிச்சைக்காக கணவரை திருப்பதிக்குக் கொண்டு செல்ல தவுலத்பீவியிடம் போதுமான பணம் இல்லை என்று கூறப்படுகிறது.
அதனால், மதனப்பள்ளி அரசு மருத்துவமனையிலே சிகிச்சை அளிக்கும் படி மருத்துவர்களை கேட்டுள்ளார். அதை தொடர்ந்து, அவரை அங்கேயே வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாபுசாயபு பரிதாபமாக இறந்துவிட்டார்.
எனினும் கணவரின் உடலை வீட்டுக்குக் கொண்டு செல்லவும், இறுதிச்சடங்கை செய்யவும் தவுலத்பீவியிடம் பணம் இல்லை. அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் ஊழியர்களிடமும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களிடமும் பிச்சை எடுத்துள்ளார் தவுலத்பீவி.
அதில் சேர்ந்த சிறு தொகையை வைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவை எடுத்து, அதன் மூலம் தனது கணவரின் பிணத்தைச் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்கை செய்துள்ளார்.
இறந்த கணவரின் பிணத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவும், இறுதிச் சடங்கை செய்யவும் பணம் இல்லாமல் மதனப்பள்ளி அரசு ம்கருத்துவமனை வளாகத்தில் கண்ணீரோடு பெண் பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.