நடிகர் சித்தார்த்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலை உறுதி செய்த அதிதி ராவ்..
மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த கணவன்! ரகசியமாக சென்று கதவை தட்டிய மனைவி!
மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த கணவன்! ரகசியமாக சென்று கதவை தட்டிய மனைவி!
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த லஷ்மன் மற்றும் சுஜன்யா தம்பதியினருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் இவர்கள் இருவரும் கொம்மு கூடம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனுஷா என்கிற பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி லஷ்மன் சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சுஜன்யா கேட்ட போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுஜன்யா, லஷ்மனைவிட்டு பிரிந்து சென்று, லஷ்மனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், சுஜன்யா தனது உறவினர்களுடன் ரகசியமாக சென்று கதவை தட்டியுள்ளார். அப்பொழுது கதவைத் திறந்த சுஜன்யாவின் கணவன் லட்சுமணனை பார்த்த உடனேயே சரம்வாரியாக அடித்துள்ளனர்.
அதேபோல் அவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அனுஷா என்ற பெண்ணையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின் அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். முதல் மனைவி இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த லஷ்மனனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.