கள்ளக்காதல் ஆசையால் கணவருக்கு சமாதிகட்டிய மனைவி.. கொன்று புதைத்த பயங்கரம்.! 



Wife Allegedly Murders Husband With Lover Over Affair, Buries Body Near Home; 2 Arrested

கள்ளகாதலுக்காக கணவரை கொலை செய்து வீட்டின் அருகில் புதைத்த மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

தம்பதி: 

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருபவர் சியாம்வீர் சிங் (வயது 42). இவரின் மனைவி கேசவ். 

இதையும் படிங்க: கணவரை குத்திக்கொன்று குடலை உருவிய விபரீதம்.. பிள்ளைப்பேறுக்காக அமானுஷ்ய மனைவியின் அதிரவைக்கும் செயல்.! 

கள்ளக்காதல்:

இதனிடையே, கேசவுக்கும் - காமத் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. 

Crime news

கண்டிப்பு: 

இந்த தகவலை அறிந்த சியாம் தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால் தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்சனை நடந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் கணவரை கொலை செய்து கள்ளக்காதலனுடன் வாழலாம் என்ற விபரீத எண்ணம் கேசவுக்கு ஏற்பட்டுள்ளது. 

கொலை: 

இதனையடுத்து, தங்களின் திட்டப்படி கள்ளக்காதல் ஜோடி கடந்த ஆகஸ்ட் 16 ம் தேதி மாலை நேரத்தில் ஷியாமுக்கு அதிக மதுபானம் வாங்கி குடிக்க வைத்துள்ளது. பின் அவரின் தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

Crime news

விசாரணை: 

கொலை சம்பவத்துக்குப்பின் உடலை சியாமின் வீட்டுக்கு அருகிலேயே புதைத்து இருக்கின்றனர். பின் சில நாட்கள் கழித்து சியாம் தொடர்பாக அவரின் சகோதரர் கேட்டபோது கேசவ் பதில் அளிக்காததால் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது.  

இதையும் படிங்க: இப்படி ஒரு பொண்டாட்டியா? உன்னால் தான் எனக்கு ஆண் குழந்தை இல்லை! ஆத்திரத்தில் கணவனின் வயிற்றை கிழித்து.... வீட்டை திறந்த போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி!!!