நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
கள்ளக்காதல் ஆசையால் கணவருக்கு சமாதிகட்டிய மனைவி.. கொன்று புதைத்த பயங்கரம்.!
கள்ளகாதலுக்காக கணவரை கொலை செய்து வீட்டின் அருகில் புதைத்த மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தம்பதி:
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருபவர் சியாம்வீர் சிங் (வயது 42). இவரின் மனைவி கேசவ்.
இதையும் படிங்க: கணவரை குத்திக்கொன்று குடலை உருவிய விபரீதம்.. பிள்ளைப்பேறுக்காக அமானுஷ்ய மனைவியின் அதிரவைக்கும் செயல்.!
கள்ளக்காதல்:
இதனிடையே, கேசவுக்கும் - காமத் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

கண்டிப்பு:
இந்த தகவலை அறிந்த சியாம் தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால் தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்சனை நடந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் கணவரை கொலை செய்து கள்ளக்காதலனுடன் வாழலாம் என்ற விபரீத எண்ணம் கேசவுக்கு ஏற்பட்டுள்ளது.
கொலை:
இதனையடுத்து, தங்களின் திட்டப்படி கள்ளக்காதல் ஜோடி கடந்த ஆகஸ்ட் 16 ம் தேதி மாலை நேரத்தில் ஷியாமுக்கு அதிக மதுபானம் வாங்கி குடிக்க வைத்துள்ளது. பின் அவரின் தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
விசாரணை:
கொலை சம்பவத்துக்குப்பின் உடலை சியாமின் வீட்டுக்கு அருகிலேயே புதைத்து இருக்கின்றனர். பின் சில நாட்கள் கழித்து சியாம் தொடர்பாக அவரின் சகோதரர் கேட்டபோது கேசவ் பதில் அளிக்காததால் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது.