மந்திரவாதிகளின் வீடியோக்களை அதிகமாக பார்த்து; தாயை சூனியக்காரி என்று நம்பி... கொலை செய்த மகன்..!!

மந்திரவாதிகளின் வீடியோக்களை அதிகமாக பார்த்து; தாயை சூனியக்காரி என்று நம்பி... கொலை செய்த மகன்..!!



Watching more videos of witches; The son who killed his mother believing her to be a witch..!!

தனது திருமணத்திற்கு தடையாக இருப்பதாக எண்ணி தாயை கொலை செய்த மகன்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிப்பவர் அப்துல் அகமது பர்ஹான் (32). அவரது தாய் அஸ்மா பரூக் (67), அப்துல் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளார். எனவே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் அப்துலிடம் அவரது தாய் திருமணத்திற்கு முன்பாக வேலை தேடுமாறு கூறியுள்ளார். 

பேய்கள் மற்றும் மந்திரவாதிகளின் வீடியோக்களை இணையத்தில் அதிகமாக பார்த்த அப்துல் அவரது தாயையும் சூனியக்காரி என்று நம்பி இருக்கிறார். எனவே தனது தாயே தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்துவதாகவும் அப்துல் நினைத்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவரது சகோதரரும் அண்ணியும் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தாயை இரும்புக் கம்பி மற்றும் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ளார். 

அப்துலின் அண்ணனும் அண்ணியும் வீட்டிற்கு வந்ததும், அவர்களது தாய் மொட்டை மாடியில் இருந்து விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று கோ-இ-பிசா போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் குர்ஜார் விசாரணை செய்தார். சந்தேகத்தில் அப்துலை விசாரித்ததில் அப்துல் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.