பெண்களிடம் அத்துமீறிய புள்ளிங்கோ; செருப்பு, தடியால் வெளுத்தெடுத்த பெண்மணி.. ஐயோ., அம்மா கதறல்.!



Uttar Pradesh Women Beat Minor boy With Slipper While he Teasing Women 

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் பகுதியில் சிறுவன் ஒருவனை பெண்மணி தடியால் தாக்கும் வீடியோ ஒன்று நேற்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

புலந்த்சாகர் அன்சாரி சாலை மார்க்கெட் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்கையில், சம்பந்தப்பட்ட சிறுவன் அங்கு வரும் சிறுமிகள் மற்றும் பெண்களை குறி வைத்து அவதூறான வார்த்தையில் பேசுவது, அத்துமீறுவது என சர்ச்சை செயல்களை தொடர்ந்து வந்துள்ளார். 

இதனையடுத்து, சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண்மணி, இளைஞனை தட்டிக் கேட்கும் பொருட்டு அவரை தடியால் வெளுத்தெடுத்து வாங்கிய சம்பவத்தை நடத்தி இருக்கிறார். 

அதுவரை பலரையும் தொந்தரவு செய்து வந்த சிறுவன், பெண்மணியின் அடி தாங்க இயலாமல் அய்யோ., அம்மா என அவரது தாய் மொழியில் கதறியது நடந்தது.