மக்களே புற்றுநோய் நினைத்து இனி கவலைப்பட வேண்டாம் .....நோய் வருவதற்கு முன்பே நமக்கு தெரிஞ்சுடும்! 3 வருஷத்துக்கு முன்னாடியே கணிக்கும் AI யின் அதிரடி ரிப்போர்ட்!!!



ai-detects-pancreatic-cancer-early-breakthrough

மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், கணையப் புற்றுநோயை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த AI தொழில்நுட்பம், நோய் உருவாகும் முன் எச்சரிக்கை அளிக்க முடியும் என கூறப்படுகிறது. தற்போது இது மருத்துவ உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அறிகுறிகள் இல்லாத சிக்கல்

பொதுவாக கணையப் புற்றுநோய் ஆரம்ப நிலையில் எந்தத் தெளிவான அறிகுறிகளையும் காட்டாது. இதனால், நோய் கண்டறியப்படும் நேரத்தில் அது கடுமையான கட்டத்தை எட்டியிருக்கும். இதுவே சிகிச்சையை சிரமமாக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

முன்கூட்டியே கணிக்கும் திறன்

புதிய ஆய்வில், நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து, உடலில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களையும் கண்காணிக்கும் முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் கணையப் புற்றுநோய் உருவாகும் சாத்தியத்தை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: விண்வெளி வீரர்களுக்கு நாசா வெளியிட்ட இன்பச் செய்தி! இனி குடும்பத்துட்டன் வீடியோ காலில் பேசுவது முதல் ரீல்ஸ் போட வரை அனுமதி !!!

சிகிச்சைக்கு புதிய வாய்ப்பு

இதனால், நோய் பரவுவதற்கு முன்பே சிகிச்சையைத் தொடங்க முடியும். அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும். இதையடுத்து, நோயாளிகளின் உயிர் பிழைப்புத் திறனும் உயர வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் பரிசோதனை முறைகளில் சேர்க்கப்பட்டால், கணையப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாகக் குறைக்கலாம் என்ற நம்பிக்கை மருத்துவ வட்டாரங்களில் நிலவுகிறது.

 

இதையும் படிங்க: 7 வருஷமாக பயங்கர தலைவலியால் அவதிப்பட்ட பெண்! ஸ்கேனில் தெரிந்த அந்த ஒரு உருவத்தை பார்த்து அதிர்ந்துப்போன மருத்துவர்கள்! நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்..!!!