பள்ளி தோழியை 4 பேருடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்... நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
பள்ளி தோழியை 4 பேருடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்... நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

திருமணமான பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் திருமணமான பெண் இருக்கிறார். இவர் சத்துணவு ஊழியர் வேலைக்கு விண்ணப்பிக்க, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பொது சேவை மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, பொது சேவை மையத்தில் இருந்த ஆபரேட்டர் உட்பட 4 பேர், பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதனை நால்வரும் விடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு பெண்ணை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பெண்ணின் உறவினர் ஒருவருக்கு பொது சேவை மைய ஆபரேட்டர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் விடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் 3 காம கொடூரன்களை கைது ஷைத்தான்.
தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ள நிலையில், அந்த காமுகன் பெண்ணுடன் பள்ளியில் பயின்றவன் என்பது விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.