ரேபிஸால் பாதிக்கப்பட்டு தந்தையின் மடியில் துடிதுடிக்க மரணமடைந்த சிறுவன்.. அலட்சியமாக இருந்ததால் பரிதாபம்.!



Uttar Pradesh Ghaziabad Minor Boy Died Rabies 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த சிறுவன் சவேஸ் (வயது 14). சிறுவன் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். 

சிறுவனின் தந்தை யாகூப். கடந்த மாதம் சிறுவனை தெருவில் வைத்து நாய் கடித்ததாக தெரியவருகிறது. ஆனால், சிறுவன் இதனை பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுவனுக்கு, இறுதியாக ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறுவன் உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டு, தந்தையின் கைகளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.