நிலத்தகராறில் பயங்கரம்: இருதரப்பு சண்டையில் 6 பேர் சுட்டுக்கொலை..! உ.பி-யில் வெறிச்செயல்.!

நிலத்தகராறில் பயங்கரம்: இருதரப்பு சண்டையில் 6 பேர் சுட்டுக்கொலை..! உ.பி-யில் வெறிச்செயல்.!



Uttar Pradesh 6 Killed Among Land Dispute 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டம், ருத்ராபூர் கிராமத்தில் நிலம் தகராறு விவகாரத்தில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள பயங்கரம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று காலை 7 மணி முதல் 8:30 மணிக்குள் இவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல், இறுதியில் கைகலப்பு நடந்தது. 

இதன் முடிவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பிரேம் யாதவ், எதிர்த்தரப்பைச் சார்ந்த சத்திய பிரகாஷ் துபே, இரண்டு குழந்தைகள், ஒரு பெண்மணி, ஒரு ஆண் என ஆறு பேர் மொத்தமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.