சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
திருமணமான ஒரே வாரத்தில் 3-வது மனைவி கொடூர கொலை.. கணவனின் அதிர்ச்சி செயல்.!!

மனைவியை கொலை செய்து அப்பாவி போல நாடகமாடிய கணவன் காவல்துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டம், அமாலி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜு பால் (வயது 44). இவரின் மனைவி ஆர்த்தி பால் (வயது 26 ). ராஜூ பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
மனைவி அடித்துக்கொலை :
தம்பதிகளுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ராஜு மனைவி ஆர்த்தியை அடித்து கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: மரணத்தின் பிடியில் சிறுமி.. பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்.!!
கொலையை மறைக்க அப்பாவி நாடகம் :
பின் கொலை சம்பவத்தை மறைக்க மனைவியை மர்ம நபர்கள் தாக்கிச் சென்றதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். மருத்துவரின் பரிசோதனையில் ஆர்த்தி முன்னதாகவே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
விசாரணையில் அம்பலமான உண்மை :
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது ராஜுவின் கொடூர செயல் அம்பலமானது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பீரியட்ஸ் அப்ப ஏண்டி சமைச்ச? மனைவி கழுத்தை நெரித்துக்கொலை..!