பேரதிர்ச்சி.. பாம்பை ஏவி கணவனை கொலை செய்த மனைவி.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

பேரதிர்ச்சி.. பாம்பை ஏவி கணவனை கொலை செய்த மனைவி.. வெளியான திடுக்கிடும் தகவல்..!



tragedy-the-wife-who-killed-her-husband-with-a-snake-sh


ஆந்திர மாநிலம் கோதாவரிகனி பகுதியில் வசித்து வருபவர்கள் ரியல் எஸ்டேட் அதிபரான பிரவீன் மற்றும் அவரது மனைவி லலிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு உறங்கு சென்ற பிரவீன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி லலிதா உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆனால் பிரவீன் உதட்டின் அருகே இரத்த காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அவரது தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Wife

இதனையடுத்து போலீசார் பிரவீனின் மனைவி லலிதாவிடம் விசாரணை நடத்தியதில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தொழிலதிபரான பிரவீன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் லலிதா பிரவினிடம் கள்ளத்தொடர்பை விட்டுவிடுமாறு பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் பிரவினால் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை நிறுத்த முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த லலிதா தனது தோட்டத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவரின் உதவியுடன் பாம்பை ஏவி பிரவீனை கொலை செய்துள்ளார். பின்னர் பிரவீன் மாரடைப்பால் உயிரழந்து விட்டதாக உறவினர்களை நம்ப வைத்துள்ளார். இதனையடுத்து லலிதா மற்றும் அவருக்கு உதவிய சுரேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.