ஓடும் ரெயிலில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர்.! பதறிப்போன தந்தை.!
ஓடும் ரெயிலில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர்.! பதறிப்போன தந்தை.!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் குருவாயூருக்கு ஒரு சிறப்பு ரயில் சென்றது. இந்த ரயிலில் குறைந்த அளவே பயணிகள் இருந்துள்ளனர். அந்த ரயிலின் ஒரு பெட்டியில் 16 வயது சிறுமியும், அவரது தந்தையும் பயணம் செய்தனர். அவர்கள் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண்கள் 6 பேர் நின்று கொண்டிருந்தனர்.
ரயில் சென்றுகொண்டிருந்தபோது அந்த 6 பேரும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 6 பேரும் சிறுமியின் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது சிறுமி அந்த 6 போரையும் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக ரயில்வே போலீசார் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த 6 பேரும் ரயிலில் இருந்து இறங்கி தப்பியுள்ளனர். இதானையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி செல்போனில் தான் எடுத்த வீடியோவை போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.