பகீர்... இறந்த மனைவியின் உடலை ஃப்ரீசரில் வைத்த கணவர்.! கொலையாக இருக்குமா.? என காவல்துறை விசாரணை.!



shock-in-madhya-pradesh-husband-kept-dead-wife-body-in

மத்திய பிரதேச மாநிலத்தில்  இறந்த மனைவியின் உடலை ஃப்ரீசரில் வைத்திருந்த  கணவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில்  ஜூலை இரண்டாம் தேதி சுமித்ரி என்பவர் உயிரிழந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரது கணவர் உடலை ஃப்ரீசரில் வைத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

madhyapradesh

இது தொடர்பாக புகாரளித்துள்ள சுமித்ரியின் சகோதரர்  தனது சகோதரியை அவரது கணவர் தான் கொலை செய்து ஃப்ரீசரில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

madhyapradesh

காவல்துறையின் விசாரணையின் போது  தனது மனைவி மஞ்சள் காமாலை நோய்கள் மரணமடைந்ததாகவும் தனது மகன் மும்பையில் இருந்து வர வேண்டி இருந்ததால் ஃப்ரீஷரில் வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இச் சம்பவம் தொடர்பாக உடலை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்து அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வந்த பின்னரே இது  தொடர்பான விவரங்கள் தெரியவரும் என காவல்துறையை தெரிவித்துள்ளது.