கொடூரத்தின் உச்சம்... பள்ளிக்கு சென்ற மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து விட்டு சாலையோரம் வீசிய அவலம்...
கொடூரத்தின் உச்சம்... பள்ளிக்கு சென்ற மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து விட்டு சாலையோரம் வீசிய அவலம்...
ராஜஸ்தான் மாநிலம் டவுசா என்ற மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் அந்த மாணவியை அவரது தந்தை பள்ளியில் விட்டு சென்றுள்ளார்.
அதனையடுத்து மாணவி அருகில் உள்ள நெட் சென்டரில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் தூக்கி சென்றுள்ளனர்.
பின்னர் நெடுஞ்சாலையில் உள்ள பழைமையான கட்டிடத்திற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மது கலந்து குடிக்க வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்த நிலையில் இருவரும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு மாலை ஆறு மணி அளவில் ஜிரோட்டா என்னும் கிராமம் அருகே மாணவியை சாலையோரம் படுக்க வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
அதனையடுத்து அந்த பக்கமாக வந்த லாரி டிரைவர் மாணவியை நிலையை கண்டு மாணவியின் தந்தை சொல்போன் நம்பரை வாங்கி நடந்ததை கூறியுள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாணவியின் தந்தை மகளிடம் விசாரித்ததில் அவர் நடந்த கொடுமையை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மருத்துவமனைக்கு அனுமதித்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்ற இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.