ரணகளமான வரவேற்பு நிகழ்ச்சி: மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் கதறிய உறவினர்கள்..!

ரணகளமான வரவேற்பு நிகழ்ச்சி: மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் கதறிய உறவினர்கள்..!



Relatives of the bridegroom are crying due to sudden heart attack

கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டத்தில் உள்ள பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி (26). அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், ஹோண்ணூறு சுவாமிக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும்  திருமணம் தடபுடலாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதியர் இருவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதற்கிடையே உற்சாகத்தில் மிதந்த  புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். மேடையில் அமர்வதும், எழுவதுமாய் இருந்த ஹோண்ணூறு சுவாமி, தனக்கு நெஞ்சுவலிப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அஜீரண கோளாறு காரணமாக அவ்வாறு இருக்கலாம் என்று கருதிய அவரது உறவினர்கள், ஹோண்ணூறு சுவாமிக்கு சோடா கொடுத்ததாக கூறப்படுகிறது. சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த ஹோண்ணூறு சுவாமி மேடையிலே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், அங்குள்ள கிராம மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஹோண்ணூறு சுவாமிக்கு ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ஹோண்ணூர் சுவாமி உயிரிழந்தாக கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மணமகன் உயிரிழந்ததால், அந்த பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.