#BigNews: 19 வயது தலித் இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம், கொலை.. ஆசிட் ஊற்றி துடிதுடிக்க நடந்த பயங்கரம்.! இந்தியாவே அதிர்ச்சி.!

#BigNews: 19 வயது தலித் இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம், கொலை.. ஆசிட் ஊற்றி துடிதுடிக்க நடந்த பயங்கரம்.! இந்தியாவே அதிர்ச்சி.!



  Rajasthan Karauli Dalit Girl Gang Raped Killed 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரௌலி, பிளபாடா - நடாவடி பகுதியில் இளம்பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தது. 

rajasthan

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அவர் அங்குள்ள மோஹண்புரா கிராமத்தில் வசித்து வரும் ஆர்த்தி பைரவா (வயது 19) என்பது உறுதியானது. 

தலித் சமூகத்தை சேர்ந்த பெண்மணி மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின், அவரின் அடையாளத்தை அழிக்க பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.