விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
மகளின் செல்போன் 3 நாட்களாக சுவிட்ச் ஆப்.... என் பொண்ணு எங்கே? கேள்வி கேட்ட தாயின் மூக்கை அறுத்து எரிந்த கொடூரம். பதற வைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தானில் நடந்த ஒரு கொடூரத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளைக் காணவில்லை என்று புகார் அளிக்கச் சென்ற தம்பதியினரை வழிமறித்து தாக்கிய கும்பல், பெண்ணின் மூக்கையே அறுத்து எறிந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையம் செல்லும் வழியில் தாக்குதல்
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபுலால் என்பவர் தனது மனைவி கெலிதேவி மற்றும் உறவினருடன் காரில் காவல் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது மருமகன் சோஹன்லால் தலைமையிலான எட்டு பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
பெண்ணின் மூக்கை அறுத்த கொடூரம்
காரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்த அந்த கும்பல், பாபுலாலின் மனைவி கெலிதேவியை கடுமையாகத் தாக்கியது. பின்னர் கத்தரிக்கோலால் அவரது மூக்கை அறுத்து எறிந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜலோர் தாக்குதல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: மாணவியை ஒருதலையாக காதலித்த இளையன்! காதலை மறுத்ததால் கழுத்தறுபட்ட கல்லூரி மாணவி! அடுத்து இளையன் எடுத்த விபரீத முடிவு!
மருத்துவமனையில் சிகிச்சை
தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பலத்த காயமடைந்த கெலிதேவி உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகள் காணாமல் போனதால் ஏற்பட்ட மோதல்
பாபுலாலின் மகளின் செல்போன் மூன்று நாட்களாக அணைக்கப்பட்டிருந்ததால், அது குறித்து புகார் அளிக்கவே அவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சோஹன்லால் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! ஊருக்குள் அரிவாளுடன் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய கும்பல்..! பகீர் வீடியோ..!!!