பெட்ரோல் டீசல் விலையால் மக்கள் பெரும் அவதி!. கிடு கிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை!.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 81 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று நேற்று முன்தினம் 74 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை ஆனது.
பெட்ரோல் டீசல் உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த பெட்ரோல் டீசல் விலையால் மக்கள் வாகனம் ஓட்டுவதற்கே யோசிக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.39 ஆக விற்பனை ஆகிறது.