பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களே கவனமாக இருங்கள்... ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்..!

பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களே கவனமாக இருங்கள்... ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்..!


Parents of girls, be careful... A lecher who sexually assaulted a one-and-a-half-year-old girl..!

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பாலியல் வன்கொடுமை என்பது சாதாரணமான செயலாக மாறி உள்ளது. அதுவும் பள்ளி செல்லும் சிறுமியிலிருந்து பச்சிளம் குழந்தை வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தையை பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.

one-and-a-half-year-old girl

இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தையின் எதிர் வீட்டில் உள்ள நபர் பெற்றோர் இல்லாத நேரத்தில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அந்த காமக்கொடூரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.