இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
ஓரினசேர்கைக்கு உடன்பட மறுத்த 12 வயது சிறுவன் கொலை; சடலம் ஏரியில் மீட்பு.!
ஓரினசேர்கைக்கு உடன்பட மறுத்த 12 வயது சிறுவன் கொலை; சடலம் ஏரியில் மீட்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை ஏரி ஒன்றில், 12 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுவன் குறித்து நடந்த விசாரணையில், அவரை தாக்குர்படா பகுதியில் இருந்து இருவர் கடத்தி வந்தது தெரியவந்ததது.
இதனையடுத்து, அவரை அழைத்து வந்த சந்தேகத்திற்கு இடமான ரஹ்மான் முகம்மத் (20) மற்றும் அவரின் சகோதரர் ஆசாத் முகம்மத் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடம் நடந்த விசாரணையில், கடந்த மார்ச் 25ம் தேதி வீட்டில் இருந்த சிறுவனை தங்களுடன் அழைத்து வந்த சகோதரர்கள், ஏரியில் வைத்து ஓரினசேர்கைக்கு அழைத்துள்ளனர்.
அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த நபர்கள் சிறுவனை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு வந்துள்ளனர் என்ற தகவல் அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் ரஹ்மான் மற்றும் ஆசாத் ஆகியோரை கைது செய்தனர்.