இப்படி வெளுத்துறாறே.... பாஜக எம்எல்ஏவை சரமாரியாக முதுகில் குத்தி கீழே தள்ளிய சாமியார்! இது அடியா? ஆசீர்வாதமா..? கோபப்படாமல் MLA செய்த விஷயம்... சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!!!



mp-bjp-mla-assaulted-by-baba-viral-video

மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று எதிர்பாராத திருப்பம் எடுத்தது. ஆசி பெற மேடைக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ மீது சாமியார் தாக்குதல் நடத்திய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

மேடையில் நடந்த எதிர்பாராத சம்பவம்

ததியா மாவட்டத்தின் பெர்ச்சா கிராமத்தில் பாகவதக் கதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மீகவாதி சீதாராம் பாபா உரையாற்றி வந்தார். அப்போது சேவடா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பிரதீப் அகர்வால் மேடைக்கு சென்று மாலை அணிவித்து ஆசி பெற முயன்றார். ஆனால் திடீரென சீதாராம் பாபா கோபமடைந்து, அவரை திட்டியதுடன் முதுகில் குத்தி பின்னுக்கு தள்ளினார். மேலும், அணிவித்த மாலையை கழற்றி முகத்தில் வீசினார்.

அதிர்ச்சியிலும் அமைதியாக இருந்த எம்.எல்.ஏ

இந்த நடவடிக்கை பொதுவாக கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் வகையிலானது. இருந்தாலும், பிரதீப் அகர்வால் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அமைதியாக பாபாவின் காலடியில் மண்டியிட்டு கைகூப்பி நின்றார். தகவலின்படி, இந்த தாக்குதலை அவர் ஆசிர்வாதம் என ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வந்த திமுகவை தெறித்து ஓடவிட்ட குழந்தை! இங்க வராதீங்க.... எங்க ஓட்டு TVK க்கு தான்....! சிறுமியின் துணிச்சலான வீடியோ!!!

‘சிறப்பு ஆசிர்வாதம்’ என்ற ஆதரவாளர்கள் விளக்கம்

பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த நிஸ்ரோல் கோயில் மகந்தான சீதாராம் பாபா, அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவர். அவரது ஆதரவாளர்கள் கூறுவதாவது, பாபா நெருக்கமானவர்களிடம் இப்படிப் பழகுவார். இது கோபம் அல்ல, ‘சிறப்பு ஆசிர்வாதம்’ என அவர்கள் விளக்குகின்றனர். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் இவரிடம் இதுபோன்ற அனுபவத்திற்காக வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 4-5 நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த வைரல் வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு மக்கள் பிரதிநிதியை இவ்வாறு நடத்துவது சரியா என்ற கேள்வியும், இது குரு-சிஷ்யர் உறவின் ஒரு பகுதியா என்ற வாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. இதுவரை எம்.எல்.ஏ தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

 

இதையும் படிங்க: இளைஞரை மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு.... உடலில் மிளகாய்ப் பொடி பூசிய கொடூரம்! தந்தை கெஞ்சியும் விடல... பழைய பகையை தீர்க்க இப்படியொரு தண்டனையா? பகீர் சம்பவம்!!!