பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி! என்ன காரணம்?

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி! என்ன காரணம்?



Modi ask sorry for people

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் கடந்த அதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

modi

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களிடம் பேசி வருகின்றார். இன்று பேசிய பிரதமர் கொரோனா குறித்து பேசினார். அதில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நான் எடுத்த இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிகிறேன்.கொரோனாவை தடுப்பது என்பது மிகப்பெரிய போராட்டம். மருத்துவர்கள் செவிலியர்கள் பணி என்பது சிறப்பானது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மோடியின் செயலை தற்போது பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.