42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: உறங்கும்போது உடல் கருகி 6 பேர் பலி.!
![maharashtra fire accident 6 died](https://cdn.tamilspark.com/large/large_img20240101130434-69777.jpg)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி, சம்பாதி நகர் பகுதியில் கையுறைகள் தயாரிக்கும் தனியார் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. நேற்று காலை நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீபத்தின் காரணமாக ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரவு நேர பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் உயிரிழந்தோரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலரும் உள்ளையே சிக்கிக் கொண்டு பலியானது தெரியவந்துள்ளது.