பீர் வாங்க காசு இல்லன்னு சொன்ன நண்பர்! கடை வாசலில் வாலிபர்க்கு நேர்ந்த விபரீதம்! சற்று நேரத்திலே எமனாக மாறிய நண்பர்கள்.... அதிர்ச்சி காட்சி!!
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் கிழக்கு பகுதியில், மது வாங்கித் தர மறுத்ததால் ஒருவரை இருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது.
மது கேட்டு தொடங்கிய தகராறு
கிரீன் சிட்டி பகுதியில் உள்ள மதுக்கடைக்கு வெளியே ஸ்மிதேஷ் பாட்டீல் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த மகேஷ் சூர்யவன்ஷி மற்றும் மங்கேஷ் தபாசே ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டதாக தகவல். இதற்கு ஸ்மிதேஷ் பணம் இல்லை என்று கூறியதும், வாக்குவாதம் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அது கடுமையான தகராறு ஆக மாறியது.
பாட்டில், மூங்கில் கம்பியால் தாக்குதல்
வாக்குவாதம் தீவிரமான நிலையில், இருவரும் ஆத்திரத்தில் ஸ்மிதேஷை தாக்கத் தொடங்கினர். அருகில் இருந்த காலி மது பாட்டிலை எடுத்து அவரது தலையில் பலமாக அடித்துள்ளனர். அதன்பின் தரையில் கிடந்த மூங்கில் கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. திடீரென நடந்த இந்த தாக்குதல் காரணமாக அவர் மயக்கம் அடைந்தார்.
இதையும் படிங்க: தெருவில் விளையாடிய 10 வயது சிறுவனை திடீரென தாக்கி தூக்கி வீசிய மர்ம நபர்! கொலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!!
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்த சம்பவத்தில் ஸ்மிதேஷ் பாட்டீலுக்கு தலையில் பலத்த காயங்கள், உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஐசிஊவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறிய காரணத்திலேயே ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவம், அந்தப் பகுதியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Ambernath, Maharashtra – A man was brutally assaulted outside a beer shop in the Green City area of Ambernath East after he refused to buy drinks for two acquaintances, leaving him with multiple fractures and serious injuries.The victim, Smitesh Patil, was sitting outside the… pic.twitter.com/F0L9UZCK2o
— NextMinute News (@nextminutenews7) April 17, 2026
இதையும் படிங்க: ஒரு நொடி அலட்சியத்தால் தாத்தாவின் கண்முன்னே உயிர் பிரிந்த பேரன்! ஈரக்கொலை நடுங்க வைக்கும் ரயில் விபத்து வீடியோ!!!