பெண்ணின் தலையில் விழுந்த அரிவாள் வெட்டு..! 9 செ.மீட்டரில் மாட்டிக்கொண்ட அரிவாள்..! மருத்துவர்களை அலறவிட்ட சவால் சிகிச்சை..! குவியும் வாழ்த்துக்கள்..!

பெண்ணின் தலையில் விழுந்த அரிவாள் வெட்டு..! 9 செ.மீட்டரில் மாட்டிக்கொண்ட அரிவாள்..! மருத்துவர்களை அலறவிட்ட சவால் சிகிச்சை..! குவியும் வாழ்த்துக்கள்..!


maharashtra-60-years-old-women-billhook-in-head

மஹாராஷ்டிரா மாநிலம் அசோலி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதாகும் பெண் மீரா பாய். மீரா பாய் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்மநபர் ஒருவர் அவர் வீட்டுக்குள் புகுந்து பெரிய அருவாள் ஒன்றால் மீராபாயின் தலையில் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.

மீரா பாய்யின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்த மருத்துவர்கள், மீரா பாய்யின் தலையை ஸ்கேன் செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், தலையின் உள்ளே சுமார் 9 செ.மீ அளவிற்கு அரிவாள் வெட்டு இறங்கி, அரிவாள் சிக்கி இருந்தது. இதனை அடுத்து 5 மருத்துவர்கள் கொண்ட குழு, தீவிர ஆலோசனைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து மீரா பாய்யை காப்பாற்றியது. இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், அவரின் மூளைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால் அவரை காப்பாற்ற முடிந்தது, மேலும், அவரது ஒரு கண் மட்டும் பாதிப்படைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.