இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. இருவர் பரிதாப பலி.!



Kerala Palakkad Accident 2 Died

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, கண்ணனூர் பகுதியில் வசித்து வருபவர் பிரமோத் (வயது 55). நேற்று முன்தினம் இரவில், சுமார் 10 மணிக்கு, உறவினர் உதயகுமார் (வயது 43) என்பவருடன் பாலக்காடு - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில், வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தனர்.

அச்சமயம், எதிர்திசையில் பிட்டுபடிக்கை பகுதியில் வசித்து வந்த 11 ம் வகுப்பு மாணவர் ஹபீப் (வயது 16), இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் அப்தாப் ரஹ்மான் (வயது 19) என்பவருடன் வருகை தந்தார். 

இதையும் படிங்க: பதறவைக்கும் காட்சிகள்.. சேர்க்கைக்கு முறுக்கிய மாடு.. முதியவர் நெஞ்சில் ஏறிபாய்ந்து ஓட்டம்... பரிதாபம் மரணம்.!

accident

விபத்தில் சிக்கி சோகம்

இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகவே, வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ஹபீப், பிரமோத் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து குழல்மன்னம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பேருந்துக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ.. பிறந்தநாளை கொண்டாட காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!