நொடியில் நடந்து முடிந்த விபத்து; இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!



Kerala Kozhikode Accident 1 Died Several Injured 

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி, மூதடி பகுதியில் நடைபெற்ற கோர விபத்து ஒன்றில், இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த பலர் காயமடைந்தனர். 

வார்க்கலா சோரோட பகுதியை சேர்ந்த ரஷீத் - சோபியா தம்பதி, தங்களின் குடும்பத்துடன் காரில் சென்றனர். இவர்களின் கார் டயர் நடுவழியில் பழுதாக, மூதடி பகுதியில் சாலையோரம் இருந்த கடையில் பஞ்சர் ஒட்டப்பட்டது. 

அச்சமயம் அவ்வழியாக வந்த லாரி ஒன்று, இவர்களின் காருக்கு பின்னால் இருந்த சிறிய ரக ஈச்சர் வாகனத்தின் மீது மோதியது. இதனால் அந்த வாகனம் காரின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. 

இவ்விபத்தில் காரில் இருந்த இரண்டரை வயது சிறுவன் முகம்மது ரஷீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பாத்திமா ஈஸா (வயது 6), ஸுஹ்ரா (வயது 55), சைப் (வயது 14), ஜுமைலத் (வயது 37), ஷஹீர் (வயது 45), பாத்திமா (வயது 17), டெம்போ ஓட்டுநர் கோபி (வயது 55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

இவர்கள் காவல் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.  

வீடியோ நன்றி: புதிய தலைமுறை