அட கடவுளே..!! ப்ரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை பரிதாப பலி.. பதறவைக்கும் சம்பவம்..
அட கடவுளே..!! ப்ரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை பரிதாப பலி.. பதறவைக்கும் சம்பவம்..
விளையாட்டுத்தமனாக வீட்டில் இருந்த பிரிட்ஜின் பின்னால் சென்ற குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. குரவிலங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அலல் - சுருதி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ரூத் மரியம் அலல் என்ற குழந்தை இருந்தது .
நேற்று குழந்தை ரூத் மரியம், வீட்டில் இருந்த பிரிட்ஜ்க்கு பின்னால் சென்று ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பிரிட்ஜில் இருந்து குழந்தை மேல் மின்சாரம் பாய்ந்து குழந்தையை தூக்கி வீசியது.
இதில் படுகாயமடைந்த குழந்தை பெற்றோர் மருத்துவமனைக்கு தூகின்சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.