தோட்டத்தில் ஒய்யாரமாக உறங்கிய பெண்ணின் முதுகில் ஏறிப்படுத்து கம்பெனி கொடுத்த நல்லபாம்பு... பகீர் வைரல் வீடியோ.!

தோட்டத்தில் ஒய்யாரமாக உறங்கிய பெண்ணின் முதுகில் ஏறிப்படுத்து கம்பெனி கொடுத்த நல்லபாம்பு... பகீர் வைரல் வீடியோ.!



karnataka-woman-snake-sleeping

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அப்சல்புராவில் வசித்து வரும் பெண்மணி, சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்ட வேலைகளை கவனித்த பெண்மணி உடல் களைப்பால் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்நிலையில், பெண்மணி தோட்டத்தில் உள்ள கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், அப்போது வந்த நல்ல பாம்பு பெண்ணின் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டு இருந்துள்ளது. இதனை தூரத்தில் இருந்தவர் வீடியோ பதிவு செய்து வருகிறார். 

மேலும், பெண் தனது உயிரை காப்பாற்றக்கூறிய பயத்தில் மல்லையா என்ற நபரை உதவிக்கு அழைத்து மறுவுகிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் பாம்பை இலாவகமாக பிடித்து அகற்றினர்.