காக்கிச்சட்டை பண்ற வேலையா இது.. 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எஸ்.ஐ.. அதிர்ச்சி தகவல்..!
காக்கிச்சட்டை பண்ற வேலையா இது.. 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எஸ்.ஐ.. அதிர்ச்சி தகவல்..!
ராஜஸ்தான் மாநிலம் தொளசா மாவட்டத்திலுள்ள லால்சோட் பகுதியை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இந்த சிறுமியை எஸ்.ஐ பூபேந்திர சிங் என்பவர் ராகுவாஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாலில் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த அந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து இந்தச் சம்பவம் குறித்து ஏ.எஸ்.பி ராமச்சந்திர சிங் கூறுகையில் சிறுமியின் வயது மற்றும் மருத்துவ பரிசோதனைகளைக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானால் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.