5 சவரன் நகைக்காக பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடுமை.. போலீஸ் ஸ்டேஷனில் ஷாக் செயல்.!



in Kerala a Girl Tortured by Cops Among Theft Case

 

பெண் வேலை பார்த்து வந்த வீட்டில் நகைகள் மாயமானதாக கூறி நேர்ந்த கொடுமையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் இஷா. இவரின் வீட்டில் சமீபத்தில் 5 சவரன் நகை திருடுபோனதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அடக்கடவுளே.. சாப்பிட சென்ற இடத்தில் உடல்கருகி பலி.. தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!! 

காவல்துறை விசாரணை:
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனர் .

நிர்வாணப்படுத்தி கொடுமை:
அப்போது பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை செய்த அதிகாரிகள், 20 மணி நேரம் சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. மறுநாள் தங்க சங்கிலி கிடைத்ததும், பெண்ணை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். 

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண்மணி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அடக்கடவுளே.. 9 வயது சிறுமி தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழப்பு.. இப்படியும் மரணம்..!!