கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்; கண்டித்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்; கண்டித்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!



frolicking alone with a lover; The shocking incident that happened to the condemned husband...

ஆந்திரபிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள தகராபு வலசையில் உள்ள எம்பிடி காலனியில் வசிப்பவர் ஜோதி. பைடி ராஜு என்பவருக்கும் ஜோதிக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பைடி ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், சுரு ராஜு என்பவருக்கும் திருமணத்திற்கு முன்பு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜோதி திருமணத்திற்கு தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்திப்பதற்காக‌ தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளியூரில் வேலை இருப்பதாக சொல்லி அடிக்கடி கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார் ஜோதி.

ஜோதியின் கணவர் பைடி ராஜுக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.பைடி ராஜு இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே கணவரை கொலை செய்ய ஏற்பாடு செய்தார் ஜோதி. கள்ள காதலனுடன் சேர்ந்து போட்ட திட்டத்தின்படி உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடைய வைத்துள்ளார்.

பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை யாருக்கும் தெரியாமல் எரித்து விட்டனர். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் ஜோதி. இதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.