உச்சத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை
உச்சத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை
இந்நிலையில் இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி 1 லிட்டா் பெட்ரோல் விலை ரூ.82.41 ஆகவும், 1 லிட்டா் டீசல் விலை ரூ.75.39 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
'தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வதை தடுக்க முடியாத' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம், வரிகளால் தான் பெட்ரோல், டீசல் விலை வந்து கொண்டிருக்கிறது. வரிகளை குறைத்தாலே குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை தானாக குறைந்து விடும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
Relentless rise in prices of petrol and diesel is not inevitable. Because, the price is built up by excessive taxes on petrol and diesel. If taxes are cut, prices will decline significantly.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 3, 2018
மேலும் பெட்ரோல், டீசல் வரியை GST-க்குள் கொண்டு வர வேண்டும் என்ன காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.
Congress demands that petrol and diesel be brought under GST immediately.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 3, 2018