நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.! தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.! தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!



driverless-metro-service-in-india

டெல்லி  மெட்ரோ ரயில் சேவையை மேலும் நவீனப்படுத்தும் வகையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ சேவை துவங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டெல்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை செயல்படும். 

டெல்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் கமாண்ட் சென்டர் என்று சொல்லப்படும் அறையில் இருந்து, ரயில் எப்போது புறப்பட வேண்டும், எங்கே எப்போது நிற்க வேண்டும், எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். நவீன சிக்னல் முறை இருக்கும் வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

metro train

கிழக்கு டெல்லியில் இருந்து மேற்கு டெல்லி வரை செல்லும் வழித்தடத்தில் இந்த தானியங்கி மெட்ரோ சேவைகள் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன. ஏழாம் எண் வழித்தடத்தில் முதல் கட்டமாக இந்த சேவை தொடங்கப்படும் என டெல்லி மெட்ரோ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.