பிறந்த சில நிமிடங்களிலேயே, நீல நிறமாக மாறிய குழந்தை! சற்றும் யோசிக்காமல் மருத்துவர் செய்த நெகிழ்ச்சி காரியம்!

பிறந்த சில நிமிடங்களிலேயே, நீல நிறமாக மாறிய குழந்தை! சற்றும் யோசிக்காமல் மருத்துவர் செய்த நெகிழ்ச்சி காரியம்!



doctor-bring-children-in-bike

மும்பையின் அலிபாக் பகுதியில் வாஜே நர்ஸிங் ஹோம் இயங்கிவருகிறது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு  கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு,  சையனோசிஸ் என்ற உடல் நீல நிறமாக மாறும் பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நர்சிங் ஹோம் மருத்துவர் சந்திரகாந்த் வாஜே, 1.5 கிமீ தொலைவில் இருக்கும்  ஆனந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு போன் செய்து அனைத்து தகவல்களையும் கூறி உதவி கேட்டுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த  மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர், வாஜே நர்சிங் ஹோம் விரைந்து குழந்தையை பரிசோதனை செய்துபார்த்துவிட்டு விரைவில்  தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற வேண்டும் கூறியுள்ளார்.

ambulance

ஆனால் அங்கு எந்தவித ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்காத நிலையில், நர்ஸாக பணியாற்றி வரும் குழந்தையின் அத்தை சுப்ரியா பெட்கர் கொடுத்த யோசனையின்படி, மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர் தன் பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றி குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கபட்டது. தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.