தண்ணீரில் மிதந்த சூட்கேஸ்! அருகில் சென்று பார்த்த போலீசாருக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி!
தண்ணீரில் மிதந்த சூட்கேஸ்! அருகில் சென்று பார்த்த போலீசாருக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி!
மும்பையில் உள்ள மாஹிம் மாக்தூம் ஷா பாபா மசூதி அருகே உள்ள கடற்கரையில் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் சூட்கேஸ் ஒன்று மிதந்து கொண்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அதில் வெளியே ஒரு நபரின் கால் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அதனை அருகில் உள்ள போலீசில் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து பார்த்த போது அதில் ஒரு ஆண் நபரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்துள்ளது.
அதனை சூட்கேஸை மீட்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த நபரின் தலை இல்லாமல் இருந்ததால் யார் கொலை செய்தார் என்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.
ஆனால் உடலின் மற்ற பாகங்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலையாளி யார் என தீவிர விசாரனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.