பெண்கள் நலத்துறை அதிகாரியின் மிருகத்தன செயல்; மறைந்த நண்பரின் 14 வயது மகளை பலாத்காரம் செய்த பயங்கரம்.!
பெண்கள் நலத்துறை அதிகாரியின் மிருகத்தன செயல்; மறைந்த நண்பரின் 14 வயது மகளை பலாத்காரம் செய்த பயங்கரம்.!

டெல்லியில் வசித்து வரும் 14 வயது சிறுமியின் தந்தை, கடந்த 2020ல் இயற்கை எய்தியுள்ளார். இதனால் சிறுமியை அவரின் தந்தை நண்பர் தனது வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளார்.
அவருக்கு திருமணம் முடிந்து மனைவியும் இருக்கும் நிலையில், சிறுமியின் மீது மோகம் கொண்ட கயவன், சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமியும் கர்ப்பமான நிலையில், விபரத்தை அறிந்துகொண்ட நபரின் மனைவி, சிறுமிக்கு கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்து இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமி சமீபத்தில் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதில் அதிர்ச்சிதரும் விஷயம் என்னவென்றால், டெல்லி பெண்கள் நலன் துறையை சேர்ந்த அதிகாரியே தனது நண்பரின் மகளை பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.