அமலானது வார இறுதி ஊரடங்கு உத்தரவு.. தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு..!

டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Delhi Govt likely to impose weekend curfew to curb COVID surge: Sources https://t.co/5n6ghjiHPz
— ANI (@ANI) January 4, 2022
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 6.46 % என்று இருப்பதால், கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மணீஷ் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.