சலூனில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.. கேள்விக்குறியாகும் தலைநகரின் பாதுகாப்பு.!

சலூனில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.. கேள்விக்குறியாகும் தலைநகரின் பாதுகாப்பு.!



Delhi 2 Killed in Saloon 

 

தலைநகரில் இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சோனு, ஆஷிஷ். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று அங்குள்ள தனியார் சலூனில் முடிவெட்டிக்கொண்டு இருந்தனர். 

அச்சமயம், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், சற்றும் எதிர்பாராத வேளையில் சோனு மற்றும் ஆஷிஷை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொலை செய்து அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

delhi

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆஷிஷ் குற்றவழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. 

சமீபத்தில் அவர் சஞ்சீவ் என்பவருடன் தகராறில் ஈடுபட்ட நிலையில், அவர் தரப்பு கும்பலா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. காவல் துறையினர் குற்றவாளிகளை பிடிக்க வலைவீசி இருக்கின்றனர்.