வீடியோ காலில் பாக்., பெண்ணுடன் திருமணம்.. CRPF வீரருக்கு ஷாக் பரிசு கொடுத்த அதிகாரிகள்.!



CRPF Jawan married pakisthan women via video call and hide the marriage from government suspended

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்தி இருந்த கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

திருமணத்தை மறைத்த CRPF வீரர்

பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேறவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் நடந்ததை மறைத்து இருந்ததாக மத்திய ரிசர்வ் காவல்துறையின் அதிகாரி முனீர் அகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: விபரீத சடங்கு.. உ.பி-யில் மாப்பிள்ளையை வச்சு செய்த மணமகள் தரப்பு.! அதிர்ச்சி காரணம்.! 

marriage

வீடியோ கால் மூலம் திருமணம்

கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முனீர் அகமது பாகிஸ்தானை சார்ந்த மேனல் கான் என்ற பெண்ணை வீடியோ காலில் திருமணம் செய்துள்ளார். இந்த விஷயத்தை அவர் தெரிவிக்காமல் மறைத்த நிலையில், பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவு தெரிவித்ததால் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

CRPF செய்தி தொடர்பாளர் விளக்கம்

இதுகுறித்து பேசிய மத்திய ரிசர்வ் போலீஸ்படை செய்தி தொடர்பாளர் டிஐஜி தினகரன், "முனீர் அகமது தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து, விசா காலத்தை மீறி இந்தியாவில் அப்பெண்ணை தங்க வைத்துள்ளார். இதனால் அவர் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடக்கடவுளே.. 9 வயது சிறுமி தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழப்பு.. இப்படியும் மரணம்..!!