10 வருஷமாச்சு.. நம்பவே முடியலை.! செம ஹேப்பியில் நடிகை சினேகா.! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??
ரயில் நிலையத்தில் CPRF வீரரை காலால் மிதித்து! கூட்டமாக சேர்ந்து கொடூரமாக தாக்கிய யாத்ரீகர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை மாலை, பிரம்மபுத்ரா மெயில் ரயிலில் பயணிக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், கன்வாரியாக்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் பணியமர்த்தப்பட்ட வீரர் கௌதம், தனது 12 வயது மகனுடன் மிர்சாபூரில் ரயிலுக்காக காத்திருந்தார். அதன்போது, ஏழு கன்வாரியாக்கள் கொண்ட குழுவுடன் ஏற்பட்ட வாக்குவாதம், விரைவில் சண்டையாக மாறி, அவர் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
இந்த புகாரின் பேரில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) நடவடிக்கை எடுத்து, மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த சத்யம், அபிஷேக் சாஹு, மற்றும் அபய் திவாரி (கஜ்ரஹாவா போகாரா) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், நான்கு சிறிய யாத்ரீகர்களுக்கு கூடுதல் கட்டண டிக்கெட் விதிமுறையின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தெய்வீக சக்தியா? கங்கை நதியில் மிதக்கும் 300கிலோ எடை கொண்ட கல்! பிரமிக்கும் மக்கள்! வைரலாகும் ஆச்சரிய வீடியோ!
RPF இன்ஸ்பெக்டர் சாமன் சிங் தோமர் கூறியதாவது, “சிஆர்பிஎஃப் வீரர் தவறான வார்த்தைகள் பயன்படுத்தியதாக கன்வாரியாக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது” என்றார்.
இந்த சம்பவம் ரயில்வே பாதுகாப்பு, பொதுமக்கள் நடத்தை, மற்றும் யாத்திரைச்செய்யும் கூட்டங்களின் ஒழுங்கு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
These drugged GuNDAs are shaming the holy Kanwar Yatra, the Hindus and defaming our sacred practice by their hooliganism. They need to be STOPPED.
It’s outrageous to see how brutally they are beating the CRPF Jawan.
I hope @crpfindia will take a stand! pic.twitter.com/iFoaeZWgsy
— Gaurav Pandhi (@GauravPandhi) July 19, 2025
இதையும் படிங்க: அத்துமீறிய கொடுமை! பள்ளி மேலாளர், வேன் ஓட்டுநர் 4 வயது சிறுமிடம் டிஜிட்டல் ரேப்! மருத்துவரால் தெரிய வந்த உண்மை! நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்...