டெல்லியிலும் வெறியாட்டம் போடும் கொரோனா..! நேற்று புதிதாக 1,227 பேருக்கு கொரோனா..! பலி எண்ணிக்கை 3,719 ஆக உயா்வு.!

டெல்லியிலும் வெறியாட்டம் போடும் கொரோனா..! நேற்று புதிதாக 1,227 பேருக்கு கொரோனா..! பலி எண்ணிக்கை 3,719 ஆக உயா்வு.!



corona-status-in-delhi-current-status

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,227 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,323-ஆக உயா்ந்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

corona

குறிப்பாக மும்பை, சென்னை, டெல்லி போன்றபகுதிகள் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துவருகிறது. இந்நிலையில் நேற்று (புதன்) மட்டும் டெல்லியில் புதிதாக  1,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,323-ஆக உயா்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 29 போ கொரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 3,719- ஆக அதிகரித்துள்ளது.