இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 904 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,64,537 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 6.64 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 2.09 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 67.17 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.