கொரோனாவோடு வெளிநாட்டிற்கு சிறப்பு விமானத்தில் தப்பிச்சென்ற இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம்!

கொரோனாவோடு வெளிநாட்டிற்கு சிறப்பு விமானத்தில் தப்பிச்சென்ற இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம்!


corona-affected-women-travelled-in-flight

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர முதலிடத்தில் உள்ளது.

இந்தநிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த பெண் ஒருவர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட யாருக்கும் தெரியாமல் துபாய்க்கு சிறப்பு விமானத்தில் தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 30 வயது நிரம்பிய பெண் புனேவில் தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பத்திரப்பதிவு நடைமுறைகளுக்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார்.

அவர் மகாராஷ்டிராவுக்கு வந்த சில நாட்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமான பயணங்கள் தடை செய்யப்பட்டது. இதனால் அப்பெண் புனேவில் உள்ள புனவாலே என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்தநிலையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

corona

இதனையடுத்து அந்த பெண்ணிற்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் அப்பெண்ணை வீட்டுத்தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு கடந்த 17-ஆம் தேதி தனது குடியிருப்பை விட்டு வெளியேறி அதன் பின்னர் அவர் தனது குடியிருப்புக்கு திரும்பி வரவே இல்லை. இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் மும்பையில் சிறப்பு விமானம் மூலம் துபாய்க்கு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண் மீது கொரோனா விதிமுறைகளை மீறி வெளிநாடு தப்பிச்சென்ற குற்றத்திற்காக சுகாதாரத்துறையினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.