பச்சிளம் குழந்தையை கழிவறையில் தவிக்கவிட்டுச்சென்ற தாய்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

பச்சிளம் குழந்தையை கழிவறையில் தவிக்கவிட்டுச்சென்ற தாய்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Chandigarh 7 days on New Born Baby Abounded Found on Washroom 

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள செக்டர் 43, ஐஎஸ்பிடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள கழிவறையில், பிறந்து 7 நாட்களேயாகும் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் கழிவறைக்கு சென்றதும், பின் அங்கிருந்து தனியே சென்றதும் தெரியவந்தது. 

இதனையடுத்து, குழந்தையை இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வந்து கழிவறையில் விட்டு சென்றது தெரியவந்தது. சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது. 

இளம்பெண் மற்றும் அவருடன் வந்த நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இவர்கள் கைதான பின்னரே குழந்தையை கைவிட்டு சென்றதற்கு காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.