திருமணமான இளம்பெண்ணின் முகத்தில் துடிதுடிக்க பெட்ரோலை ஊற்றிய இளைஞர்! வெளியான பதற வைக்கும் சம்பவம்!

திருமணமான இளம்பெண்ணின் முகத்தில் துடிதுடிக்க பெட்ரோலை ஊற்றிய இளைஞர்! வெளியான பதற வைக்கும் சம்பவம்!


boy spray petrol on young girl face

தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் வசித்து வந்த திருமணமான 20 வயது பெண் ஒருவருக்கு அதே பகுதியில் வசித்து வந்த வாலிபர்  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவரை  மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வெளியே சென்ற அந்த இளம்பெண்ணை வழிமறித்து தன் மீது போலீசில் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி மிரட்டியுள்ளார். ஆனால் அந்த இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாலிபர் தான் கொண்டு வந்த பெட்ரோலை இளம்பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

petrol

 இதில் அந்த  பெண்ணின் கண்களில் பெட்ரோல் பட்டு அவர் துடிதுடித்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் ஆமதாபாத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.