மனைவியை நண்பர்களுடன் படுக்கையை பகிர வற்புறுத்திய கணவர்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

மனைவியை நண்பர்களுடன் படுக்கையை பகிர வற்புறுத்திய கணவர்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Bangalore Husband Arrested by Cops Who Forced wife to Sex With Friends 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அம்ருதஹள்ளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்மணிக்கு சொந்த ஊர் மங்களூர் ஆகும். 

இவர் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெண்மணியின் கணவர் பாலியல் விஷயங்களில் அதீத ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார்.

இதனால் செக்ஸ் சாட், வாட்ஸப்பில் ஆபாச குழுக்கள் என எந்நேரமும் அதிலேயே பொழுதை போக்கி வந்துள்ளார். இந்த விவகாரம் மனைவிக்கு எதற்ச்சையாக தெரியவரவே, அவர் கணவரின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். 

அவர்கள் மகனை கண்டித்து சென்றுள்ளனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நபர் தனது மனைவியை நண்பர்களுடன் உடலுறவு மேற்கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். 

இதனால் பதறிப்போன பெண்மணி, விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர், பெண்ணின் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.