தாயின் தலையை துண்டாக வெட்டி பையில் கொண்டு சென்ற 19 வயது கொடூர மகள்! பின் காட்டுக்குள் விடிய விடிய.... பகீர் பின்னணி!!!



assam-daughter-kills-mother-suspected-black-magic

அசாம் மாநிலத்தில் 19 வயது இளம்பெண் தனது தாயை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கார்கி ஆங்லாங் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில், பெண் தனது தாயின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது. தற்போது குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடூரமாக நடந்த தாக்குதல்

பூஜா மலங் (19) என்ற இளம்பெண், தனது தாய் அனுமாயை (42) கத்தியால் தாக்கி கழுத்தை அறுத்துள்ளார். இதையடுத்து தலையை உடலிலிருந்து பிரித்தெடுத்து பையில் வைத்து காட்டுக்குள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல் நடந்தபோது தடுக்க முயன்ற தந்தை மற்றும் சகோதரியையும் அவர் தாக்கியதால், அவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க: கோயில் கழிவறைக்குள் சென்ற 2 சிறுமிகள்! ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வரல...செல்போனைத் திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி ! நடந்தது என்ன?

போலீஸ் நடவடிக்கை மற்றும் பறிமுதல்

அடுத்த நாள் காலை தேடுதல் நடத்திய போலீஸார், காட்டுப்பகுதியில் இருந்த பூஜாவை கைது செய்தனர். அப்போது அவர் தாயின் வெட்டப்பட்ட தலையுடன் இருந்தது உறுதியாகியுள்ளது. அவரிடமிருந்து கத்தி, அரிவாள், குங்குமம், எண்ணெய் மற்றும் மண் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வழக்கில் முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகின்றன.

மாந்திரீக சடங்கு சந்தேகம்

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, இது மாந்திரீக சடங்கு அல்லது பில்லி சூனியம் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தில் முன்பாக எந்தத் தெளிவான பிரச்சனையும் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு கொடூரமான செயலில் இளம்பெண் ஈடுபட காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நள்ளிரவு 12 மணிக்கு மனைவியை வர சொன்ன கணவன்! மறுத்ததால் 5 மாத குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்டு மிரட்டல்! சுமார் 20 அடி உயரத்தில் இருந்து நொடியில் குழந்தையை கீழே.... கொலை நடுங்க வைக்கும் சம்பவம்!!!