ஓரினச்சேர்க்கையின் போது நடந்த தகராறில்... வாலிபரை அடித்து கொலை செய்த பார்ட்னர் கைது..!!

கேரளாவை சேர்ந்த முகமது பாசில் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து, கோவையில் உள்ள துடியலூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பிளாட்பாரத்தில் தங்கி, பிளாஸ்டிக் பொருட்கள் கண்ணாடி பாட்டில்கள் போன்ற குப்பைகளை சேகரித்து விற்பனை செய்து வந்தார்.
கணவன் மனைவி இருவரும் அந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து தினமும் அதனை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து தங்கள் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் தங்கி இருந்த அதே பிளாட்பார்மில் கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் தங்கியிருந்தார். ரமேஷும் முகமது பாசிலும் நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தனர்.
அவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், வேலை முடிந்ததும் தினமும் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். மது அருந்திவிட்டு இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவரும் வேலையை முடித்துவிட்டு ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பிறகு இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரமேஷ், முகமது பாசில் மீது பாறாங்கல்லை எடுத்துப் போட்டுள்ளார். இதில் முகமது பாசில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்த பொதுமக்கள், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முகமது பாசில் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரமேஷை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.