ஆண்குறியில் இருந்து பீறிட்ட இரத்தம்.. துடிதுடிக்க வாலிபர் மரணம்..! 1 மாணவி, 2 மாணவர்கள் எஸ்கேப்..! பயங்கரம்.!!

ஆண்குறியில் இருந்து பீறிட்ட இரத்தம்.. துடிதுடிக்க வாலிபர் மரணம்..! 1 மாணவி, 2 மாணவர்கள் எஸ்கேப்..! பயங்கரம்.!!



Andra Pradesh Man Killed Over 3 Students Transgender Surgery Gone Wrong Blood Leaked form Penis

திருநங்கையை மாற விரும்பிய இளைஞர் மருத்துவ மாணவர்களிடம் அறுவை சிகிச்சை செய்ய முயற்சி, அது தவறாக முடிந்ததால் ஆண்குறியில் இருந்து இரத்தம் வெளியேறி இளைஞர் மரணடைந்தார்.  

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டம், ஜெருகுமல்லியை அடுத்துள்ள காபிபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 28). கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக ஸ்ரீகாந்துக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கணவன் - மனைவி சண்டையில் இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக வீட்டினை விட்டு வெளியேறிய ஸ்ரீகாந்த், வாழ்க்கையின் மீது விரக்தி ஏற்பட்டு ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார். அப்போது, விசாகப்பட்டினம் பகுதியில் வசித்து வரும் அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்படவே, அசோக்கிடம் திருநங்கையாக மாற மும்பை செல்கிறேன் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்ட அசோக், மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.1 இலட்சம் பணம் செலவாகும். நெல்லூரில் பி.பார்ம் பயின்று வரும் மாணவர்கள் குறைந்த செலவில் அறுவை சிகிச்சை செய்வார்கள். அவர்களை எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.  அசோக்கின் பேச்சை கேட்டு நெல்லூர் வந்த ஸ்ரீகாந்துக்கு, பி.பார்ம் படித்து வந்த மாணவி மற்றும் 2 மாணவர்கள் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்வதாக தெரிவித்துள்ளனர். நெல்லூரில் இருக்கும் தனியார் விடுதியில் அறையெடுத்து அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அங்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. 

Andra Pradesh

ஸ்ரீகாந்தின் மர்ம உறுப்பை அறுவை சிகிச்சை செய்கையில் ஏராளமான இரத்தம் பீறிட்டு வெளியேறவே, மாணவர்களால் அதனை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க, அறை முழுவதிலும் தேங்கிய உடல் இரத்தம், கதவு வழியே வெளியேறியுள்ளது. இதனைக்கண்டு பதறிப்போன விடுதி ஊழியர்கள் நெல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அறையின் கதவை திறந்து பார்த்தபோது உண்மை தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்தின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் அசோக் மற்றும் தப்பிச்சென்ற கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.